சினிமா
பட்ஜெட்டில் முக்கால் வாசி.. சிம்பு கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்!
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, அடுத்ததாக, பெரிய பட்ஜெட் படம் நடிக்க உள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள இந்த படத்தை, நடிகர் கமல் ஹாசன் தான் தயாரித்து வருகிறார்.
இந்த படத்திற்காக, பல்வேறு பயிற்சிகளை எடுப்பதற்கு, சிம்பு லண்டன் சென்றுள்ளதாகவும், சமீபத்தில் தகவல் வெளியானது. சிம்புவின் 48-வது படமாக உருவாக உள்ள இந்த படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், சிம்புவை வைத்து திரைப்படம் எடுக்கும் முயற்சியில், இன்னொரு தயாரிப்பாளர் ஒருவர் முயன்றுள்ளார். இதனால், அவரை சந்தித்து, தனது எண்ணத்தை சிம்புவிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அவர், 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.
ஒட்டுமொத்த படத்தையும் 40 கோடி ரூபாயில் எடுக்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்,சிம்புவின் சம்பளத்தை கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இதனால், அப்படியே பின்வாங்கிய அவர், வேறொரு நடிகரை வைத்து, அந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
மேலும், கமல் தயாரிக்கும் படத்திற்கும், சிம்பு அதிகமாக தான் சம்பளம் கேட்டாராம். ஆனால், தற்போது 20 கோடி ரூபாய் தான் சம்பளமாக கொடுக்க முடியும், படம் வெளியான பிறகு, மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்று கமல் கூறியதால், சிம்பு அமைதியாகிவிட்டதாகவும், கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login