Connect with us

Raj News Tamil

ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி

இந்தியா

ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி

ஹைதராபாத் பம்பள்ளியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரசாயன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் கிடங்கு உள்ளது. அதன் அருகே கார் மெக்கானிக் செட் ஒன்றும் உள்ளது.

மெக்கானிக் செட்டில் கார்களை நிறுத்தி வெல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு ரசாயனக் கிடங்குக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஏழு பேர் உடல்கள் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அந்தக் கட்டிடத்தின் அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் அங்கு சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top