இந்தியா
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது..!
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டு செயலிப்பு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் விசாரித்த போது அந்த நபர் குடிபோதையில் உளறியது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர், மனநலம் பாதித்த நபர் என்றும் குடிபோதையில் உளறி உள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். அந்த நபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login