அரசியல்
இது நடந்தால் பதவியில் இருந்து விலகிவிடுவேன் – ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் சென்றார். அங்கு மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது : மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகபடுத்த மாணவர்கள் யோகாசனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் ‘நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன்’ என கூறினார்.
நாளை இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் அஞ்சலி செலுத்துகிறார்.
You must be logged in to post a comment Login