Connect with us

Raj News Tamil

டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து – மின்வாரியத்தின் அலட்சியமே காரணம்?

தமிழகம்

டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து – மின்வாரியத்தின் அலட்சியமே காரணம்?

சென்னை புழல் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில், மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

முறையான பராமரிப்பு இன்றி காணப்படும் இந்த டிரான்ஸ்பார்மரால், பலமுறை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த டிரான்ஸ்பாமரில் தீ விபத்து ஏற்பட்டதாக, அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், விரைவாக செயல்பட்டு, தீயை அணைத்தனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி பொதுமக்கள், மின்சார வாரியத்தின் அலட்சிய இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

தனியார் பள்ளியின் அருகிலேயே இந்த டிரான்ஸ்பார்மர் இருப்பதால், சில மாணவர்களும், இந்த விபத்தில் சிக்க வாய்ப்பு இருந்தது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, இந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்து தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top