Connect with us

Raj News Tamil

“ரொம்ப அருவெறுப்பாக இருக்கு” – மீண்டும் பொங்கியெழுந்த த்ரிஷா!

சினிமா

“ரொம்ப அருவெறுப்பாக இருக்கு” – மீண்டும் பொங்கியெழுந்த த்ரிஷா!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜு, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து, அவதூறாக பேசியிருந்தார்.

இதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நடிகை த்ரிஷா தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சில இழிவான மனிதர்கள், கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் செயல்களை பார்க்கும்போது, அருவெறுப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

இனிமேல் தன்னுடைய சட்ட ஆலோசகர்கள் தரப்பில் இருந்து, இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் த்ரிஷா கூறியுள்ளார்.

இதற்கு முன், நடிகர் மன்சூர் அலிகானும், நடிகை த்ரிஷா குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top