அரசியல்
ஜெயலலிதா சிறைக்கு செல்ல டிடிவி தினகரன் தான் காரணம் சிவி.சண்முகம்..!
முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டிடிவி தினகரன் விவேகானந்தரை போல தங்களுக்கு அறிவுரைகளை கூறி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரை நம்பி சென்ற 18-சட்ட மன்ற உறுப்பினர்களின் நிலைமை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். அலி பாபா 40 கூட்டத்தை வைத்துள்ள டி.டி.வி அதை பார்த்துக்கொள்ளவும் என்று காட்டமாக பேசினார் சி.வி.சண்முகம் பேசினார்.
மேலும் ஜெயலலிதா சிறைக்கு செல்ல முழுக்காரணம் டிடிவி தினகரன் என்று குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய இவர், மிகப்பெரிய ஆளுமை இல்லாத போதிலும் கட்சியை எடப்பாடி காப்பாற்றியுள்ளார் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login