Connect with us

Raj News Tamil

குழந்தை இல்லாமல் விரக்தி.. சின்னஞ்சிறு விஷயங்களுக்கு சண்டை.. தீக்குளித்து உயிரிழந்த இளம்பெண்..

தமிழகம்

குழந்தை இல்லாமல் விரக்தி.. சின்னஞ்சிறு விஷயங்களுக்கு சண்டை.. தீக்குளித்து உயிரிழந்த இளம்பெண்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கு, சந்தியா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று, அழகேசன் வழக்கம் போல், லாரி ஓட்டும் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அழகேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறையும் மீறி, அழகேசன் பணிக்கு சென்றுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவரது மனைவி, தன் மீது மண்ணெண்னை ஊற்றி, தீ வைத்துக் கொழுத்திக் கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம் பக்கத்தினர், சந்தியாவை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சந்தியாவின் இறப்பு குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன 4 ஆண்டுகளில், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top