தமிழகம்
உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட 21 வயது இளைஞர்.. பத்தே நாளில் மரணம் அடைந்த சோகம்..
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாளையம். இவருக்கு 21 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளார். பால் பாக்டெ்டை வீடு வீடாக விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்த சூர்யா, உடல் எடை அதிகமாக இருந்ததால், அதனை குறைப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தனியார் நிறுவனத்தை நாடிய அவர், அங்கு கொடுத்த மருந்துகளை கடந்த 10 நாட்களாக சாப்பிட்டு வந்துள்ளார். இதையடுத்து, மிகவும் வேகமாக உடல் எடை குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது தான் சிறந்தது என்றும், ஆனால், அது கடினமாக இருப்பதால், இளைஞர்கள் இவ்வாறு மருந்து சாப்பிட்டு, உடல்லை எடையை குறைக்க நினைக்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login