தமிழகம்
கொள்ளுத் பேத்தியிடம் பேசிய பாட்டி.. மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய பேரன்
சென்னை ஓட்டேரியில் உள்ள டோபிகானா பகுதியை சேர்ந்தவர் மலர். 60 வயதாகும் இவர், சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கும், இவரது பேரன் ஹென்றி என்பவருக்கும் இடையே, ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், மலர் தனது பேரன் ஹென்றி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த ஹென்றியின் மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஹென்றி, தனது பாட்டியிடம் சண்டையிட்டுள்ளார். “எதற்காக என் மகளிடம் பேசுறீங்க.. என்னை பற்றி காவல்துறையிடம் தவறாக எதற்கு சொன்னீங்க” என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில், தனது கையில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து, மலரை ஹென்றி வெட்டியுள்ளார். மலரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஹென்றி, ஜோதி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login