Connect with us

Raj News Tamil

கார் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி 54 -வழக்கு பதிவு..!

அரசியல்

கார் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி 54 -வழக்கு பதிவு..!

சென்னையை சேர்ந்தவர் சஞ்சய் குமார் என்பவருக்கு போக்குவரத்துக் காவல் துறை தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

அதில் தங்களின் கார் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி 54-முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பதிவிடப்பட்டது. மேலும் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமல்படுத்துவதற்கு முன்பாக போடப்பட்ட வழக்கு என்பதால், ரூ.5400 அபராதம் செலுத்துமாறு சலான் அனுப்பப்பட்டது.

இதனை கடந்த 19-ஆம் தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர், இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அவர்கள், தொழில்நுட்ப கோளாறால் இவ்வாறு நடைபெற்றதாக பதில் அளித்தனர். தற்போது இவரின் 54-முறை வழக்குபதிவு செய்யப்பட்ட, சம்பவம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top