தமிழகம்
திருட வந்த இடத்தில் குறட்டைவிட்டு தூங்கிய நபர்.. அலேக்காக பிடித்த மக்கள்.. வடிவேலுவை மிஞ்சும் திருடன்..
சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மா நகரில், 50 ஆண்டுகளுக்கும் பழமையான விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. நேற்று இரவு இந்த கோவிலுக்குள், திருடன் ஒருவன் புகுந்து, உள்ளே இருந்த பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளான்.
ஆனால், நீண்ட நேரம் போராடியும் உடைக்க முடியாததால், அங்கிருந்த மற்றொரு பீரோவை திறக்க முயற்சித்தான். அந்த பீரோவில், வெறும் சாமி துணிகள் மட்டும் இருந்ததால், அதனை கலைத்துபோட்டுவிட்டு, களைப்பில் அங்கேயே தூங்கியுள்ளான்.
இதனை மறுநாள் காலை பார்த்த கோவில் நிர்வாகிகள், அவனை பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடிவேலு படங்களின் காமெடிகளையே மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவம், அங்கிருந்தோரை பெரும் நகைப்புக்கு ஆளாக்கியுள்ளது.
You must be logged in to post a comment Login