சினிமா
முதியோர் இல்லத்தில் தீபாவளியை கொண்டாடிய நடிகர் மோகன்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மோகன் உணவு உடை இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மோகன், தாய்லாந்தில் நடைபெறும் தளபதி68ன் படப்பிடிப்பில் தனது பகுதியை நிறைவு செய்துவிட்டு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். எனது ரசிகர்கள் தான் என்னுடைய முதுகெலும்பு என்றும் அவருகளுக்காகதான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடந்துகொள்வேனே தவிர ஏமாற்றும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் எனவும் கூறினார்.