தமிழகம்
முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரி பி.ஜே.பி.யினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு, இழப்பீட்டுத்தொகை பராபட்சமின்றி அனைவருக்கும் உடனடியாக வழங்க கோரி பி.ஜே.பி., விவசாய அணி சார்பாக முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாகஅறிக்க வேண்டும். வருவாய்துறையின் சாகுபடி கணக்கீட்டின்படி அனைத்து விவசாயிகளுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க தாமதிக்காமல் புள்ளியல் துறை விவரப்பட்டியலை உடனே வழங்க வேண்டும். பரளை ஆறு, கிருதுமால், கூத்தங்கால்வாய், குண்டாறு பிரிவு கால்வாய்களை போர்கால அடிப்படையில் மராமத்து செய்ய வேண்டும் முழக்க மிட்டனர்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பி.ஜே.பி. நிர்வாகிகள் மகளீர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment Login