தமிழகம்
பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை.. தலை.. வயிறு.. கை..-களில் சரமாரி தாக்குதல்..
சேலம் மாவட்டம் அரிசி பாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர். பாஜகவில் மாநகர இளைஞரணிச் செயலாளராக உள்ள இவர், நேற்று மாலை பள்ளப்பட்டி பகுதிக்கு வந்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், உதயசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த உதயசங்கர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login