Connect with us

Raj News Tamil

“என் பொண்ணு வேணுமா உனக்கு” – மருமகன் கழுத்தை அறுத்த மாமனார்! பகீர் சம்பவம்!

தமிழகம்

“என் பொண்ணு வேணுமா உனக்கு” – மருமகன் கழுத்தை அறுத்த மாமனார்! பகீர் சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன், டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரும், சரன்யா என்ற பெண்ணும், காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஜெகன் கூலி வேலை செய்து வந்ததால், பெண் வீட்டார் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி, ஜெகனும், சரன்யாவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், டைல்ஸ் வேலை செய்வதற்காக, திட்டம்பட்டியில் இருந்து, காவிரிப்பட்டினத்திற்கு, நேற்று காலை ஜெகன் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், கடுமையாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கதறி அழுதுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதையடுத்து, உறவினர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதற்கிடையே, பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், நேற்று மாலை சரண் அடைந்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top