Connect with us

Raj News Tamil

பல இரவுகள் கணவரை நினைத்து…! – நடிகை சுருதி சண்முகப்பிரியா

சினிமா

பல இரவுகள் கணவரை நினைத்து…! – நடிகை சுருதி சண்முகப்பிரியா

பிரபல சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்தான் நடிகை சுருதி சண்முகப்பிரியா. கடந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

உடல் நலத்தில் பெரிதும் அக்கறையுடன் இருந்த அரவிந்த் சேகர், திடீரென மாரடைப்பால் இறந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுருதி சண்முகப்பிரியா தன் கணவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதாவது, ‘என் கணவர் அரவிந்த் என்னுடன் இல்லை என்பதை நான் உணரவே இல்லை. முன்பிருந்ததை விட இப்போது தான் அரவிந்த் மேல் உள்ள காதல் அதிமாகி உள்ளது.

ஆனால் பல இரவுகள், அவரது போட்டோவை பார்த்து ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது’ என்று அழுதுள்ளேன் என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு, சின்னத்திரை ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

More in சினிமா

To Top