Connect with us

Raj News Tamil

“தம்பி ரொம்ப சீன் போடாத” – பாஜக வார்டு உறுப்பினரை கலாய்த்த அமைச்சர் கீதாஜீவன்!

தமிழகம்

“தம்பி ரொம்ப சீன் போடாத” – பாஜக வார்டு உறுப்பினரை கலாய்த்த அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், பாஜக வார்டு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

அப்போது, பாஜக-வை சேர்ந்த விஜயகுமார் என்ற வார்டு உறுப்பினர், குடிநீர் பிரச்சனை தொடர்பாக மனு அளித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட கனிமொழி, பிரச்சனையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், விஜயகுமார் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ஆனால், அங்கிருந்து நகராமல் இருந்த விஜயகுமாரை பார்த்து, “தம்பி ரொம்ப சீன் போடாதப்பா” என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top