Connect with us

Raj News Tamil

“ஆசையை நிறைவேத்துறேன்” – 4 மாத குழந்தையை மண்வெட்டியால் கொன்ற தாய்.. கள்ளக்காதலால் நடந்த கொடூரம்..

இந்தியா

“ஆசையை நிறைவேத்துறேன்” – 4 மாத குழந்தையை மண்வெட்டியால் கொன்ற தாய்.. கள்ளக்காதலால் நடந்த கொடூரம்..

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள தனௌதி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு தேவி. 35 வயதான இவருக்கும், மந்திரவாதி ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மஞ்சு தேவிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையை பலி கொடுத்தால், தான் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும் என்று அந்த மந்திரவாதி, மஞ்சு தேவியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி, தனது 4 மாத குழந்தையை, மண்வெட்டியை வைத்து, கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மஞ்சு தேவியை நேற்று கைது செய்தனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய அந்த மந்திரவாதியை தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்காகவும், தனது ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் பச்சிளங் குழந்தையை தாயே கொன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top