Connect with us

Raj News Tamil

ஓடும் மெஷினை கையில் பிடித்த ஒன்றரை வயது குழந்தை.. தாயின் கண்முன்னே நடந்த கொடூரம்..

Trending

ஓடும் மெஷினை கையில் பிடித்த ஒன்றரை வயது குழந்தை.. தாயின் கண்முன்னே நடந்த கொடூரம்..

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பஞ்சாரம். இவருக்கு, மனிஷா தேவி என்ற மனைவியும், தீஸ்குமார் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.

மனைவியும், கணவனும், நாமக்கல் மாவட்டம் ஒலப்பாளையம் கிராமத்தில் உள்ள நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று, மனிஷா தேவி தனது குழந்தை தீஸ்குமாருடன், நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, அங்கு ஓடிக் கொண்டிருந்த மிஷினின் பெல்ட்டை குழந்தை தீஸ்குமார், கையில் பிடித்துள்ளான். இதில், மிஷினுக்குள் இழுத்து செல்லப்பட்ட குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. ஒன்றரை வயது குழந்தை, தாயின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top