Connect with us

Raj News Tamil

பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

தமிழகம்

பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு விவரம்:-

செப்டம்பர் 13-ம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top