Connect with us

Raj News Tamil

ஆடையை கழட்டச் சொன்ன இயக்குநர்.. அதிர்ச்சியில் மூழ்கிய பிரியங்கா சோப்ரா.. 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்தேன்..

சினிமா

ஆடையை கழட்டச் சொன்ன இயக்குநர்.. அதிர்ச்சியில் மூழ்கிய பிரியங்கா சோப்ரா.. 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்தேன்..

தளபதி விஜய் நடிப்பில் உருவான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு, பாலிவுட் சினிமாவில் நடித்து வந்த இவர், தற்போது, ஹாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பாலிவுட் சினிமாவில், தான் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதாவது, பாலிவுட் சினிமாவில், ஒரு திரைப்படத்தில் அன்டர் கவர் ஏஜெண்ட்டாக, பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சியில், ஒரு நபரை மயக்குவதற்காக, உள்ளாடையை கழட்டுவது போன்று காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் காட்சியில் உள்ளாடையை கழட்டியபோது அதை கேமராவில் காண்பிக்க வேண்டும் என்று இயக்குநர் பிரியங்கா சோப்ராவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், அந்த செட்டை விட்டே கிளம்பியுள்ளார்.

பின்பு இரண்டு நாட்கள் கழித்துதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தையும், பிரியங்கா சோப்ரா, அந்த பேட்டியில் கூறியுள்ளார். பாலிவுட் சினிமாவின் கோர முகத்தை, வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் பேசியுள்ள பிரியங்கா சோப்ராவின் இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top