Connect with us

Raj News Tamil

திமுக இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டம்! – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தமிழகம்

திமுக இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டம்! – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சேலத்தில் வருகிற ஜனவரி 21-ம் தேதி, தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதன் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையின் அருகில் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி வைத்தார்.

பின்னர் எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு 20ம் தேதி மதியம் 1:30 மணிக்கு சென்றடைகிறது.

மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மாநாட்டுச் சுடரை ஏந்திச் செல்கின்றனர். மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இறுதியில் இளைஞர் அணிச் செயலாளர், மாநாட்டுச் சுடரை அன்று மாலை கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.

More in தமிழகம்

To Top