Connect with us

Raj News Tamil

“என்னை அவர் ஏமாத்திட்டாரு” – 2 வயது குழந்தையுடன் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்..!

தமிழகம்

“என்னை அவர் ஏமாத்திட்டாரு” – 2 வயது குழந்தையுடன் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்..!

திருப்பூர் மாவட்டம் முருகம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதாகும் இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது 2 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தனலட்சுமி கலந்துக் கொண்டார். அப்போது, ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.

அதில், “கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த என்னிடம் வெங்கடேஷ் என்ற ராணுவ வீரர் பழகினார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவர், நெருக்கமாக பழகினார். இதனால், நான் கர்ப்பம் அடைந்தேன். ஆனால், என்னை ஏமாற்றி, அந்த கர்ப்பத்தையும் கலைத்துவிட்டார்.

தற்போது, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதுடன், என்னுடைய ஆபாச படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுகிறார்.. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top