Connect with us

Raj News Tamil

மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்..!

தமிழகம்

மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்..!

அகிம்சை என்ற ஆயுதம் கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராடியவர் மகாத்மா காந்தி. இவரது நினைவு நாளான ஜனவரி 30-ந்தேதி நாடு முழுவதும் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது 76வது நினைவுத் தினத்தை பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு.

ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக” என்று பதிவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top