Connect with us

Raj News Tamil

அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்..!!!

தமிழகம்

அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்..!!!

சமீபகாலமாக இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு டீசல், பெட்ரோல் முதல் அரிசி, காய்கறி வரை அனைத்து உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அங்கு வாழ வழியின்றி அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில், அதிகாலை இலங்கையில் இருந்து அகதிகளாக சிலர் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில், அவர்கள் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இலங்கையில் இருந்து இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top