Connect with us

Raj News Tamil

மாமியாருடன் காதல் வளர்த்த இளைஞர்.. – கோபத்தில் மருமகன் செய்த காரியம்!

தமிழகம்

மாமியாருடன் காதல் வளர்த்த இளைஞர்.. – கோபத்தில் மருமகன் செய்த காரியம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, வேன் ஓட்டுநராக பணியாற்றி வரும் சுரேஷிற்கு, அதே மருத்துவமனையில், குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்கு, உறவினர்கள் சிலர், அந்த மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், கண்ணன் என்ற நபரும், குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால், அவரை பார்த்து கடும் கோபம் அடைந்த சுரேஷ், “நீ ஏன் இங்கு வந்தாய். இங்கிருந்து கிளம்பு” என்று கூறி சண்டை போட்டுள்ளார். மேலும், கண்ணனை அவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், சுரேஷை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கண்ணன் தனது மாமியாரிடம் தகாத உறவு வைத்துள்ளார்.

இதனை நான் பலமுறை கண்டித்துள்ளேன். ஆனால், அவர்கள் இருவரும் இதனை கேட்கவில்லை. இப்படி இருக்கும்போது, அவர் என் குழந்தையை பார்க்க வந்தார். இதனால், கோபம் அடைந்து, அவரிடம் சண்டை போட்டதாக, சுரேஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை வளாகத்திலேயே, இருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றமடைந்த நோயாளிகள், மருத்துவமனையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top